என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீனவர் தூக்குபோட்டு தற்கொலை"
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). மீனவர். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் நடந்த நிலையில் வளர்மதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.
மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்த செல்வம் 2 மகள்களுக்கு எப்படி திருமணம் செய்து கொடுக்க போகிறோம்? என வேதனையில் இருந்து வந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை செல்வத்தின் உறவினர் விஜயன் அங்குள்ள கோவில் பின்புறம் உள்ள தோப்புக்கு சென்ற போது அங்குள்ள ஒரு மரத்தில் செல்வம் கைலியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்